அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்த குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அயோத்தி நில வழக்கில் 3 பேர் கொண்ட சமரசக் குழுவின் இடைக்கால அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது .வழக்கை விரைவாக விசாரித்து தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.
மேலும் இது குறித்து உச்சநீதிமன்றம் தெரிவிக்கையில் ஜூலை 31 ஆம் தேதி வரை சமரசக் குழு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது .அயோத்தி நில வழக்கில் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினமும் விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது .அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்த குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.