Mnadu News

அரசியலமைப்பை புல்டோசர் மூலம் தகர்க்க முடியாது: மம்தா பானர்ஜி விமர்சனம்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிட்ம பேசியுள்ள, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாஜக தற்போது ஆட்சியில் இருக்கிறது, அதனால்தான் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்கிறார்கள்; வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக வெற்றி பெறாது.அதே சமயம், அதிகாரம் என்பது தற்காலிகமானது தான், நாற்காலி வரலாம், போகலாம் ஆனால் ஜனநாயகம் என்றென்றும் தொடரும் என்பதை பாஜக புரிந்து கொள்ளவில்லை.அதே நேரம், அரசியலமைப்பு என்றென்றும் தொடரும்,அதில், சில திருத்தங்கள் இருக்கலாம். ஆனால் இந்த அரசியலமைப்பை புல்டோசர் மூலம் தகர்க்க முடியாது என்று கூறி உள்ளார்.

Share this post with your friends