Mnadu News

அரசு பள்ளியில் திருட முயன்ற மர்ம நபர்கள் தப்பியோட்டம்..!

கோவில்பட்டி அருகே அரசு பள்ளியில் திருட முயன்ற மர்ம நபர்கள் பொதுமக்கள் வருவதை கண்டு தப்பியோடியுள்ளனர்.

தூத்துக்குடி ; தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல்மில் காலணியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பு அறை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு பள்ளியில் ஏதோ உடைக்கும் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் பள்ளிக்கு சென்றுள்ளனர். இவர்களை கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆய்வு மேற்கொண்ட போது கணிப்பொறி உள்ளிட்ட சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடி செல்ல வைத்திருந்தது தெரியவந்தது. புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this post with your friends