Mnadu News

அரசு பேருந்தில் சக பயணிகளுடன் பயணித்த ஆட்சியர்;

கரூர்;

கரூர் மாவட்டத்தில் கடவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேக்கமலை, கோவில்பட்டி, இடையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அந்த கிராம பகுதிகளில் பொதுமக்கள் காலையில் விவசாய பணிகளுக்கு செல்வதால் மாலை 3 மணிக்கு மேல் மனுநீதி முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதிகாரிகள் தனித்தனியே வாகனங்களில் சென்றால் டீசல் செலவு அதிகமாகும் என்பதால் சிக்கன நடவடிக்கையாக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அரசு பேருந்தில் சக அலுவலர்களுடன் அமர்ந்து மனுநீதி முகாமிற்கு சென்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியது.

Share this post with your friends