Mnadu News

அரசு பேருந்து ஓட்டுநர் ஆசிட் குடித்து தற்கொலை முயற்சி

*சென்னை, பூந்தமல்லி பணிமனையில் பணிக்கு சென்ற ஓட்டுநருக்கு பேருந்து தராமல் இழுத்தடிப்பு

*மன வேதனை அடைந்த ஓட்டுநர் ஆசிட் குடித்து தற்கொலை முயற்சி

*ஓட்டுநர் அம்மா தொழிற்சங்க பேரவையை சேர்ந்தவர் என்பதால் பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு

சென்னை மாவட்டம்

சென்னை , பூந்தமல்லி அடுத்த புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(38), பூந்தமல்லி அரசு பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

இன்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்தவருக்கு பணிமனை மேலாளர் மற்றும் அதிகாரிகள் அவர் இயக்குவதற்கு முறையான பேருந்து வழங்காமல் இழுத்தடிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பணிமனை அதிகாரிகளுடன் கேட்டபோது முறையாக பதில் சொல்லவில்லை என்றும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்து வீட்டிற்கு சென்ற அவர் வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை கண்ட அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு நசரத்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்தையடுத்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பூந்தமல்லி பனிமனைக்கு சென்று அதிகாரிகளிடம் கேட்க சென்றதால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்த சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போலீசார் அவர்களை கலைத்து விட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவகுமாரை அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் கமலக்கண்ணன் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். .

Share this post with your friends