Mnadu News

அரிசி, கோதுமை, ஆட்டாவின் விலை 19 சதவிகிதம் அதிகரிப்பு

கடந்த ஓர் ஆண்டில் அரிசி, கோதுமை மற்றும் ஆட்டா ஆகியவற்றின் விலை 8 முதல் 19 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஆட்டா அல்லது கோதுமை மாவின் விலை அதிகபட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 36 ரூபாய் ஆக இருந்தது, இது கடந்த ஆண்டை விட சுமார் 19 சதவிகிதம் அதிகமாகும்.. இதேபோல அரிசியின் சராசரி சில்லறை விலை ஒரு கிலோ 38 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் விலை கடந்த ஓராண்டில் 8 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

Share this post with your friends