Mnadu News

அரியானா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.

அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்புப் படை சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் உயிரிழப்பு, சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் தெரியவில்லை. பிலாஸ்பூர் தொழிற்பேட்டையில் உள்ள இந்த தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அப்பகுதி புகைமூட்டமாக காணப்பட்டது.

Share this post with your friends