அரியானா மாநில அரசு ஏற்கனவே 60 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கி வரும் நிலையில், தற்போது 45 முதல் 60 வயதுக்குட்பட்ட குறைந்த வருமானம் கொண்ட திருமணமாகாதவர்கள் மற்றும் விதவைகளுக்கு மாதம் ₹2,750 ஓய்வூதியம் வழங்குவதாக நேற்று அறிவிப்பை வெளியிட்டது.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/07/haryana-1-1024x576.jpg)
அதன்படி , ஓர் ஆண்டுக்கு வருமானம் ₹1.80 லட்சத்திற்கு குறைவாக உள்ள 45 முதல் 60 வயதுக்குட்பட்ட திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாதம் ₹2,750 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்தார். அதேபோல், ஆண்டு வருமானம் ₹3 லட்சத்துக்கு குறைவாக உள்ள 40 முதல் 60 வயதுடைய ஆண் மற்றும் பெண் விதவைகளுக்கு மாதந்தோறும் ₹2,750 வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/07/haryana.jpg)
இதனால் ஆண்டுக்கு ₹240 கோடி கூடுதல் சுமை ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த குறிப்பிட்ட வயது மற்றும் வருமான வரம்பில் மொத்தம் 65 ஆயிரம் திருமணமாகாதவர்கள் மற்றும் 5,687 விதவைகள் உள்ளனர் என்று முதல்-மந்திரி கட்டார் கூறினார். மேலும் அவர்களின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய இந்த ஓய்வூதியம் உதவும் என்று கூறிய அவர், 60 வயதை அடைந்த பிறகு அவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று கூறி உள்ளார்.
![](https://mnadu.com/wp-content/uploads/2023/07/money.jpg)