Mnadu News

ஆண், பெண்ணுக்கு ஒரே திருமண வயது:மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் உத்தரவு.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே சீரான திருமண வயதினை கொண்டு வர வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, நீதிபதி ஜே.பி. பர்டிவாலா ஆகியோர் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு,ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறான திருமண வயது பரிந்துரைக்கப்படுவதில், சட்டரீதியான செல்லுபடியாகும் தன்மை இவ்வழக்கில் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது.இதே போன்ற உணர்வுடன் இதற்கு முன்பே அஷ்வினிகுமார் உபாத்யாய் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்,அதை முன் வைத்து, இவ்வழக்கும் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

Share this post with your friends