Mnadu News

ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடத்தில் பிரதமர் மோடி வழிபாடு.

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெள்ளத்தில் ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடம் சேதமடைந்தது.அதையடுத்து, மறுசீரமைக்கப்பட்ட நினைவிடத்தை கடந்த ஆண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார். இன்று காலை கேதார்நாத் கோயிலில் வழிபட்ட பிரதமர் மோடி ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடத்திற்கு சென்றார். அங்கு மறுசீரமைக்கப்பட்ட நினைவிடத்தை பார்வையிட்டு வழிபாடு செய்தார்.

Share this post with your friends