ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி விழாக்களை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ள வாழ்த்தில், ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சரஸ்வதி தேவி தனது மெய்ஞானத்தால் அறியாமை என்ற இருளை அகற்றி, நமது மக்களுக்கு வளமையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும். துர்கா தேவி, நம் மக்களை ஒரே குடும்பமாய் ஒன்றிணைத்து, அனைத்து தடைகளையும் தகர்த்து நமது தேசிய இலக்கை அடைவதற்கான வலிமையை நமக்கு வழங்கட்டும். நம் மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பும் பாசமும் சகோதரத்துவமும் கொண்ட ஒரே குடும்பம் போல ஒருங்கிணைந்த உணர்வில் இந்த பண்டிகைகளை உற்சாகத்துடன் கொண்டாடுமாறு நமது மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.எ;னறு தெரிவித்துள்ளார். இதே போல், தெலங்கானா மற்றும் புதுவை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்,அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் தமிழக மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More