Mnadu News

ஆர்.எஸ்.எஸ். பேரணி: மாவட்ட காவல்துறைக்கு டிஜிபி அறிவுறுத்தல்.

கடந்த அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளன்று தமிழகத்தில் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிருந்த நிலையில் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.பின்னர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வருகிற நவம்பர் மாதம் 6 ஆம் தேதி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, நவம்பர் மாதம் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி அளித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதோடு, தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளை கருத்தில் கொண்டு பேரணிக்கு அனுமதி அளிக்குமாறு அந்தந்த மாவட்ட காவல்துறைக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More