Mnadu News

ஆறு வயது சிறுவன் கொலை! உறவினர் கைது! கண்கலங்க வைக்கும் காரணம்!

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொக்லைன் டிரைவரரான ஆதிமூலத்தின் மகன் 6 வயதாகும் மதியரசு. இந்த சிறுவன் கடத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 16 ஆம் தேதி மாலை வீட்டின் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு விளையாட சென்றவன மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகனை உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க இயலவில்லை . இதுகுறித்து அவர்கள் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர்.

அப்போது அந்த பகுதியில் பயன்பாட்டில் இல்லாத மேல்நிலை குடிநீர் தொட்டியில் மதியரசு பிணமாக கிடப்பது நேற்று தெரிய வந்தது. இது குறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது சிறுவனின் கழுத்தில் காயம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், சிறுவனை உறவினர் ஒருவரே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறுவனின் உறவினரான 18 வயதான பிரகாஷ் என்பவர் போக்சோ மற்றும் கொலை ஆகிய இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் தொல்லை கொடுத்து சிறுவனின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து தொட்டியில் வீசியது அமபாலாமானது.

இது தொடர்பாக பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, சிறுவனை ஒருவர் மட்டும் கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை என்று கூறி சிறுவனின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Share this post with your friends