Mnadu News

ஆளுநர்களுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை அவசியம்: பினராயி விஜயன் கடிதம்.

தமிழக ஆளுநருக்கு எதிரான முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினின் நடவடிக்கையை பாராட்டி கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதத்தில், ஆளுநருக்கு எதிரான விஷயத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஒருங்கிணைந்த முயற்சி பாராட்டத்தக்கது என சுட்டிக்காட்டியுள்ளார்.அதே சமயம், மாநில அரசின் செயல்பாட்டை குறைக்கும் வகையில் ஆளுநர்கள் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள பினராயி விஜயன், நமது கூட்டாட்சி கொள்கைகளுக்கு அச்சுறுத்தும் வகையிலும் ஆளுநர்கள் செயல்படுவதால் ஆளுநருர்களுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this post with your friends