Mnadu News

இணையவழியில் மட்டுமே தமிழ்வழிக் கல்விச் சான்று: கல்வித் துறை உத்தரவு.

பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பள்ளிக் கல்வியில் பொதுமக்களும், மாணவர்களும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றை பெற இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கும் சேவையை பள்ளிக் கல்வித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி வரும் காலங்களில் தமிழ் வழியில் படித்ததற்கான சான்று இணையவழியாக மட்டுமே வழங்கப்பட வேண்டும். அந்த சான்றினை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் எக்காரணம் கொண்டும் கையினால் பூர்த்தி செய்து வழங்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends