சூரியக் கீற்றுகள் நாட்டிலேயே முதலில் அருணாசல் மாநிலத்தில் உள்ள கிபிதூ கிராமத்தில்தான் படர்வதால், அந்தக் கிராமத்தை நாட்டின் முதல் கிராமம் என அமித் ஷா அழைத்தார். இந்நிலையில், கிபிதூ கிராமத்தின் இயற்கை அழகை வெளிப்படுத்தும் காணொலியை ட்விட்டரில் வெளியிட்ட அமைச்சர் அமித் ஷா, ‘நாட்டின் முதல் கிராமமான கிபிதூ பயணத்தின்போது அழகான இயற்கை அமைப்புகளைக் கண்டுகளித்தேன். இயற்கை அழகால் அருணாசல் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. அதைக் கண்டுகளிக்க அனைவரும் அருணாசலுக்கு, முக்கியமாக கிபிதூ கிராமத்துக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More