Mnadu News

இந்தியாவின் ‘முதல் கிராமத்துக்கு’ சுற்றுலா வாருங்கள்: அமித் ஷா அழைப்பு.

சூரியக் கீற்றுகள் நாட்டிலேயே முதலில் அருணாசல் மாநிலத்தில் உள்ள கிபிதூ கிராமத்தில்தான் படர்வதால், அந்தக் கிராமத்தை நாட்டின் முதல் கிராமம் என அமித் ஷா அழைத்தார். இந்நிலையில், கிபிதூ கிராமத்தின் இயற்கை அழகை வெளிப்படுத்தும் காணொலியை ட்விட்டரில் வெளியிட்ட அமைச்சர் அமித் ஷா, ‘நாட்டின் முதல் கிராமமான கிபிதூ பயணத்தின்போது அழகான இயற்கை அமைப்புகளைக் கண்டுகளித்தேன். இயற்கை அழகால் அருணாசல் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. அதைக் கண்டுகளிக்க அனைவரும் அருணாசலுக்கு, முக்கியமாக கிபிதூ கிராமத்துக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this post with your friends