இந்தியாவின் பல மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதே சமயம்,அடுத்த 5 நாட்களில் இந்தியாவின் பல மாநிலங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்திலும் ஒடிசாவிலும்; வெப்ப அலை வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஒடிசாவில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் 16-ஆம் தேதி வரை அங்கன்வாடிகள், தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More