தினசரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்த விவரத்தை இன்று காலை வெளியிட்டது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

120 நாட்களுக்கு பிறகு இன்றே குறைந்த பாதிப்பாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 75 ஆயிரத்து 473 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 40 லட்சத்து 4 ஆயிரத்து 553 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 37 ஆயிரத்து 220 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 565 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 217 கோடியே 82 லட்சத்து 43 ஆயிரத்து 970 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டு உள்ளது.