Mnadu News

இந்தியாவில் நான் கொல்லப்படலாம்: நீரவ் மோடி கதறல்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,ஆயிரம் கோடி கடன் மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடி, இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றார். கடந்த 2019-ஆம் ஆண்டு பிரிட்டனில் கைது செய்யப்பட்ட அவர், அந்நாட்டுத் தலைநகர் லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், சிறைச்சாலையில் உள்ள மனநல மருத்துவரை சந்தித்த நீரவ் மோடி, என்னை இந்தியாவுக்கு நாடு கடத்தினால், சிறைச்சாலையிலேயே தான் கொல்லப்படலாம் அல்லது தற்கொலை செய்து கொள்ளலாம், எதுவாகினும், சிறையிலேயே நான் இறந்துவிடுவேன் என்று அஞ்சுவதாகக் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this post with your friends