Mnadu News

இந்தியா – பாகிஸ்தான் போட்டி: அகமதாபாத் நகரில் ஹோட்டல் அறைகளின் வாடகை ஜெட் வேகத்தில் உயர்வு.

ஐசிசி உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டது.அதன் படி, இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 15-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் அன்றைய தினம் அகமதாபாத் ரசிகர்கள் படையால் திருவிழா போன்று ஜொலிக்கும.; இதற்கிடையே ரசிகர்கள் அக்டோபர் 15-ஆம் தேதி அகமதாபாத்தில் கூடும் வாய்ப்பை பயன்படுத்தி அங்குள்ள நட்சத்திர ஓட்டல்கள் ரூம் வாடகைகளை தாறுமாறாக உயர்த்தியுள்ளன. 5 ஆயிரம் ரூபாய் வாடகை கொண்ட ரூம் வாடகை, அக்டோபர் 15-ஆம் தேதியன்று 10 மடங்கு அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் ரூம்கள் புக் செய்யும் இணையதளம் மூலம் இந்த உயர்வு தெரியவந்துள்ளது. அப்படி விலை உயர்த்தப்பட்ட நிலையிலும் ரூம்கள் அனைத்தும் புக் ஆகிவிட்டதாக தெரிகிறது.

Share this post with your friends