Mnadu News

இந்தியா-மியான்மர் எல்லையில் கண்காணிப்பு தீவிரம்.

மணிப்பூரில் தொடரும் வன்முறை பதற்றத்துக்கு இடையே இந்தியா-மியான்மர் எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.மணிப்பூர் வன்முறைக்கு மத்தியிலும் அம் மாநிலத்தில் உள்ள இந்தியா-மியான்மர் எல்லையில், எல்லை பாதுகாப்பு படைகளின் வான்வழி மற்றும் தீவிர தரைவழி கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மணிப்பூர் வன்முறையை பயன்படுத்தி, எல்லைக்கு அப்பால் முகாமிட்டுள்ள கிளர்ச்சிக் குழுக்கள் இந்திய எல்லை வழியாக ஊடுருவ எத்தனிக்கும் முயற்சியை முறியடிக்கும் நடவடிக்கையாக இந்த கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

Share this post with your friends