தூத்துக்குடி;
இந்திய கடலோர காவல்படையினர், ரோந்து கப்பல் மூலம் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். அப்போது இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் இலங்கை நிகாம்பு பகுதியை சேர்ந்த, மார்க்ஸ் ஜூட் மாஸ்டர், ஆண்டனி ஹேமா நிஷாந்தன், இம்மானுவேல் நிக்சன், துருவந்தா ஸ்ரீலால், சுதீஷ் சியான் என்பது தெரிய வந்தது. அவர்கள் படகு பறிமுதல் செய்யப்பட்டதோடு இந்திய கடலோர காவல்படையினர் அவர்களை தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் தமிழக கடலோர காவல்குழும அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.