Mnadu News

இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவு.

இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 479 புள்ளிகள் உயர்ந்து, 57 ஆயிரத்து 625 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 140 புள்ளிகள் அதிகரித்து, 17 ஆயிரத்து 123 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. ஒட்டுமொத்தமாக, அனைத்து துறை பங்குகளும் எழுச்சி கண்டன. இதனிடையே, இன்றைய வர்த்தக நேர முடிவில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, டாலர் ஒன்றுக்கு 82 ரூபாய் 31 பைசாவாக இருந்தது.

Share this post with your friends