Mnadu News

இந்தி எதிர்ப்பு போராட்டம் தோல்வி: பா.ஜ.தலைவர் அண்ணாமலை பேட்டி.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள பா.ஜ.க, மாநில தலைவர் அண்ணாமலை, இந்தி திணிப்பு எனும் பெரிய திமுக போராட்டம் படுதோல்வி அடைந்துள்ளது. இந்தி எதிர்ப்பு நாடகத்திற்கு எதிர்மறையாக திமுக நடந்து கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.
ஐஐஎம், ஐஐடியில் இந்தி கட்டாயமாக்கப்படும் என கூறிய மத்திய அரசின் அறிக்கையை முதல் அமைச்சர் காட்ட வேண்டும். பிரதமர் அலுவலகம் உட்பட எங்கு வேண்டுமானாலும் திமுக போராடட்டும். ஆனால் உண்மை இருக்க வேண்டும் என்றார்.
நாட்டின் வறுமை நிலை 1 சதவீதத்திற்கு கீழே வந்துள்ளது. அரசுக்கு எதிராக திட்டமிட்டு பட்டினி குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. திமுக அரசைக் கண்டித்து பா.ஜ.க, சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். என்று அவர் கூறி உள்ளார்.

Share this post with your friends