Mnadu News

இன்று மாலை வெளியாகும் ஜெயிலர் செகண்ட் சிங்கிள் அப்டேட்!

ஜெயிலர்: 

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜெயிலர். ஜெயிலர் படத்தில் ரஜினிமுத்துவேல் பாண்டியன் எனும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

அதே போல பல மொழி சூப்பர் ஸ்டார்கள் ஜெயிலர் மூலம் சங்கமித்து உள்ளனர். அதன் படி, மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ஜாக்கி ஷ்ராஃப் என பல முக்கிய நடிகர்கள் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. ராக் ஸ்டார் அனிருத் இப்படத்துக்கு இசை அமைத்து உள்ளார். தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. மேலும், ஜெயிலர் படத்தில் ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமையை ஐங்கரன் இண்டர் நேசனல் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. 

வைரலான “காவாலா” : 

இதுவரை சூப்பர் ஸ்டாரின் பேட்ட, தர்பார் படங்களுக்கு அனிருத் இசையமைத்து இருந்த நிலையில், அவை அனைத்துமே பிளாக் பஸ்டர் ஆல்பங்கள் ஆனது. அந்த வரிசையில், ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிள் சென்ற வாரம் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ரீல்ஸ் முதல் கலை நிகழ்ச்சிகள் வரை அனைத்திலும் ஒலித்து கொண்டே இருக்கிறது. அருண் ராஜா காமராஜ் வரிகளில், ஷில்பா ராவ் குரலில், தமன்னா பிரத்யேக நடன அசைவுகள் ரசிகர்களை சுண்டி இழுத்து உள்ளது எனலாம். அந்த சூடு அடங்குவதற்குள் ஜெயிலர் படக்குழு நேற்று சட்டென்று ஒரு சர்ப்ரைஸ் உதிர்த்து உள்ளது. 

ஜெயிலர் செகண்ட் சிங்கிள் அப்டேட்: 

ஆம், புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இன்று மாலை ஆறு மணிக்கு ஜெயிலர் சிங்கிள் குறித்த பிராமோ வெளியாகும் என கூறி உள்ள நிலையில், அது தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி உள்ளது. 

Share this post with your friends