Mnadu News

இமாச்சலில் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

இமாச்சல் மாநிலம் ,பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு; பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து 247 ஏக்கர் பரப்பளவில் ஆயிரத்து 470 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் 18 சிறப்புப் பிரிவுகள், 17 சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவுகள், 18 சிறப்பு ஆபரேஷன் தியேட்டர்கள், 750 படுக்கைகள், 64 ஐசியு படுக்கைகளுடன் கூடிய அதிநவீன மருத்துவமனை பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இன்று எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்துள்ள பிரதமர் மோடி, 3ஆயிரத்து 650 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி விழாவில் உரையாற்றினார்.இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து , குலு பகுதியில் கொண்டாடப்படும் தசரா கொண்டாட்டங்களிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

Share this post with your friends