Mnadu News

இம்மாத இறுதிக்குள் கோரிக்கையை ஏற்க வேண்டும்: ராஜஸ்தான் அரசுக்கு சச்சின் பைலட் கெடு.

ராஜஸ்தான் முன்னாள் துணை முதல் அமைச்சரும்;, காங்கிரஸ் எம்எல்ஏவுமான சச்சின் பைலட், மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக கடந்த 5 நாட்களாக மேற்கொண்ட நடைபயணம் நிறைவடைந்தது.இதையடுத்து ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள சச்சின் பைலட்,எனது கோரிக்கைகள் இம்மாத இறுதிக்குள் ஏற்கப்படாவிட்டால், மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டம் நடத்தப்படும். எனது இறுதி மூச்சு உள்ளவரை நான் மக்களுக்காக பணியாற்றுவேன். யாரும் என்னை அச்சுறுத்த முடியாது” என தெரிவித்துள்ளார்.

Share this post with your friends