70 வயதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை சுற்றி வளைத்து துணை ராணுவத்தினர் கைது செய்து இழுத்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி தனது கண்டனத்தைப் பதிவு செய்தது. இந்நிலையில், இம்ரான் கான் கைதை எதிர்த்து அவரது வழக்குரைஞர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருந்த மனு விசாரணைக்கு வந்த போது, இம்ரான் கைது சட்ட விரோதம் என்று கூறி அவரை “உடனடியாக” விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More