Mnadu News

ஈழ மக்களின் சுதந்திர விடுதலைகோரி உண்ணாவிரத போராட்டத்தில் களமிறங்கிய !
தியாகதீபம் திலீபன் நினைவு நாள்!!

தியாக தீபம் திலீபனின் 35ஆம் ஆண்டு நினைவு இறுதி நாள் நினைவேந்தல், இன்று காலை 10 மணியளவில் நல்லூரில் ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய தினம் திலீபனின் அஞ்சலி நிகழ்வுகள் மாபெரும் எழுச்சியுடன் மக்களாலும் பொது அமைப்புக்களாலும் மிக உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்படுகின்றது.

சுதந்திர விடுதலைகோரி தியாகதீபம் திலீபன் ஆகுதியான நினைவிடத்தில் 10.48 மணியளவில் சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தியாகதீபம் திலீபனுக்கு பொதுச் சுடரினை, ஈழ யுத்தத்தில் இரண்டு கண்களும் இரண்டு கைகளையும் இழந்த முன்னாள் போராளி சேகரட்ணம் ராகவன் ஏற்றி வைத்துள்ளார்.

அதன் பின்னர் நல்லூரின் வடக்கு வீதியில், ஈகைச் சுடரினை விடுதலைப் போரில் வீரமரணமடைந்த 2ம் லெப்டினனின் தந்தை சின்னப்பு பூபாலன் ஏற்றி வைத்தார்.
அதனையடுத்து போராளிகள் மற்றும் மாவீரர்களின் பெற்றோரால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை தமிழ்த்தேசிய மாவீரர் பணிச்செயலகத்தின் ஏற்பாட்டில் கைதடியில் இருந்து நல்லூர் தியாகதீபம் நினைவிடம் வரை தூக்குக் காவடி எடுத்து வரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

4 நீதிபதிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை: கொலீஜியம் நடவடிக்கை.

தமிழக மாவட்ட நீதிபதிகளான ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர்நீதிமன்ற...

Read More

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவு.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம்...

Read More