Mnadu News

உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர் நிதியுதவி: சவூதி அரேபியா.

சவூதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நேற்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.அப்போது, உக்ரைன் – ரஷியா இடையே சண்டை முடிவுக்கு கொண்டுவர சவூதி அரேபிய அரசு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். அதேர், இரு தரப்புக்கு இடையே சமாதானம் செய்ய முயற்சிகளை தொடர தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ள அவர், உக்ரைனுக்கு, 400 மில்லியன் டாலர் அதாவது 3 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவியை மனிதாபிமான அடிப்படையில் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends