Mnadu News

உக்ரைன் குடியிருப்பு பகுதியில் ரஷிய ஏவுகணை தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு.

ரஷ்ய உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி பேச்சுவார்த்தை உள்ளிட்ட பிற முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. போரின் விளைவால் பலர் உயிரிழந்து வருகின்றனர். பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்து வருகின்றன. இந்த சூழலில், அல் ஜசீரா வெளியிட்ட செய்தியில், உக்ரைனின் கிழக்கே சுலோவியான்ஸ்க் நகரில் குடியிருப்பு பகுதியில் ரஷியாவின் 7, எஸ்-300 ரக ஏவுகணைகள் தாக்கியதாகவும் இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.ஆனால், குடியிருப்பு மீது தாக்குதல் நடைபெறவில்லை என ரஷியா கூறி உள்ளது.

Share this post with your friends