Mnadu News

உக்ரைன் போர்: தவறுதலாக சொந்த நகரிலேயே குண்டு வீசிய ரஷ்யா.

ரஷ்யாவின் போர் விமானம் ளுர-34,உக்ரைனின் எல்லைப்புறத்தில் உள்ள பெல்கோரோட் நகரில் தவறுதலாக குண்டு வீசியது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சம் அடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து பேசியுள்ள பிராந்திய ஆளுநர் கிளாகோவ்,ரஷ்யா வீசிய குண்டால் நகரத்தின் மையப் பகுதியில் பெரிய பள்ளம் உருவாகி உள்ளது. அதோடு, இந்த குண்டுவெடிப்பில் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர். பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.இதனிடையே,இந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடந்தி வருவதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

Share this post with your friends