Mnadu News

உண்ணாவிரதத்தில் ஈபிஎஸ், சட்டப்பேரவையில் ஓபிஎஸ்.

தமிழக சட்டப் பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 17-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மறைந்த முன்னாள் எம்எல்ஏ-க்கள், தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டன. நேற்று ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மழைக்கால கூட்டத்தொடர் 3-வது நாள் கூட்டம்; இன்று நடைபெற்று வருகின்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஐயப்பன் ஆகிய 4 பேரும் பங்கேற்றுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வரும் வேளையில், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் சட்டப் பேரவைப நிகழ்வில் பங்கேற்று வருவதும் அரசில் விமர்சகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.

Share this post with your friends