நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தமிழக மாளிகையில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு ஆலோசனைக் கூட்டம் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உதகையில் இயங்கி மூடப்பட்ட ஒரே பொதுத்துறை நிறுவனமாக இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை கட்டிடத்தில் நீலகிரி மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் ஐடி நிறுவனம் துவங்க இந்தாண்டு இறுதிக்குள் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வுகள் மேற்க்கொண்டு முதலமைச்சருக்கு அறிக்கை சமர்பித்து ஐடி நிறுவனம் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More