Mnadu News

உப்பள தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்து அரசாணை வெளியீடு.

தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், தமிழகத்தில், உப்பள தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தனி நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உப்பளத் தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்டு தனி நலவாரியம் செயல்படும். உப்பு உற்பத்தித் துறையில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள், மற்ற அனைத்து நல வாரியங்களைப் போலவே, வாரியத்தில் தங்களை உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends