Mnadu News

உயரும் கொரோனா தாக்கம்! அலர்டான உலக நாடுகள்!

நாட்டையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பிடியில் இருந்து உலகம் மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறது. ஆனால், உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பை பார்க்கும் போது இன்னும் கொரோனா ஓயவில்லை என்றே தோன்றுகிறது. நாளுக்கு நாள் அதன் வீரியம் அதிகரித்தே காணப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 கோடியே 68 லட்சத்து 23 ஆயிரத்து 325 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 36 லட்சத்து 5 ஆயிரத்து 709 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 60 கோடியே 66 லட்சத்து 55 ஆயிரத்து 830 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 65 லட்சத்து 61 ஆயிரத்து 786 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends