Mnadu News

உயிருக்கு போராடிய போதும் ஓட்டுனர் செய்த செயல் : இறுதியில் ஏற்பட்ட விபரீதம்


வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் அடுத்த பேரம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்.
திருப்பத்தூரில் உள்ள அரசு போக்குவரத்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

வழக்கம்போல பேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூரில் இருந்து சென்னை
நோக்கி வந்த அவருக்கு நெற்குன்றம் அருகே வந்துக் கொண்டிருக்கும்போது திடீரென
மாரடைப்பு ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுனர் ரமேஷ் பேருந்தை ஓரமாக
நிறுத்திவிட்டு தன்னுடைய இருக்கையில் இருந்தபடியே ஆட்டோவை அழைத்தார்.

ஆட்டோவில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஓட்டுனர் ரமேஷ் பரிதாபமாக
உயிரிழந்தார். அத்தனை பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுனர் பயணித்த
பயணிகளுக்கு சாமியானார்.இவரது இழப்பு பயணிகள் மற்றும் பொதுமக்களை துயரத்தை
ஆழ்த்தியது. இனியாவது ஓட்டுனரை மதிப்போம்.

Share this post with your friends