Mnadu News

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில்: மே 1ஆம் தேதி சித்திரை தேரோட்டம்.

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம் மே 1ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி,பெரியகோவில் தேரை அலங்கரிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேரை சுத்தம் செய்து வர்ணம் பூசும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.அதோடு, தேரின் மேல் பகுதியில் சவுக்கு கட்டைகள் அமைத்து வண்ண வண்ண துணிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் வழிபட ஏதுவாக 14 இடங்களில் தேரை நிறுத்த கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Share this post with your friends