காத்மாண்டுவில் காற்றின் தரக் குறியீடு 190 ஐத் தாண்டியுள்ளதால் உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் இந் நகரம் முதலிடம் பெற்றுள்ளதாக IQ Air என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.அதோடு,இத்தகைய மோசமான காற்று மாசுக்கு, நேபாள நாட்டின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீ அதே நேரம்,விவசாய எச்சங்களை எரிப்பது,கட்டுமானப் பணிகளால் ஏற்படும் தூசி, பழைய, மோசமாகப் பராமரிக்கப்படும் வாகனங்களின் புகை, நிலக்கரி, செங்கல் சூளைகளின் புகை ஆகியவையே காரணம் என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More