உலக நாடுகளை எப்போதுமே ஏவுகணை கொண்டு பயமுறுத்துவதில் வட கொரியா கைதேர்ந்த நாடு. வடகொரியா இந்த ஆண்டு பெரிய அளவில் ஏவுகணை சோதனையை தீவிரம் ஆக்கியுள்ளது. இந்நிலையில், இதுவரை சுமார் 30 இக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி சோதித்துள்ளது.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/123725505_a54ba28c-b301-4e85-a675-fbcbe448f4fe.jpg)
அமெரிக்கா போன்ற உலக நாடுகள் வலியுறுத்தியும், வடகொரியா விடாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையை நிகழ்த்தி வருகிறது. தொடர்ந்து ஏவுகணை சோதனையை அதிகப்படுத்தி வரும் வடகொரியா, அதன் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் புதிய பீரங்கி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/200971-north-korea-missile.jpg)
தென்கொரியா இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், வடகொரியாவின் இத்தகைய நடவடிக்கை, 2018 உடன்படிக்கையை மீறும் செயல் என்று தெரிவித்ததாக தென்கொரிய செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/206106-kim-jong-un.jpg)
“வட கொரியாவின் தொடர்ச்சியான தாக்குதல்கள் கொரிய தீபகற்பம் மற்றும் சர்வதேச சமூகத்தின் அமைதியை குறைப்பதற்கு உட்படுத்தும் செயல்கள்” என்று கூறி உள்ளது. இந்த சம்பவம் குறித்து வடகொரிய அரசு ஊடகம் உடனடியாக செய்தி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.