Mnadu News

உ.பி. தொழிற்சாலையில் தீ விபத்து:பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பல்.

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியின் கெர்சகேரா தொழில்துறை பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் மின்கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.அதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு ஆறு தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this post with your friends