Mnadu News

ஊழலுக்கு எதிராக நான் தொடர்ந்து போராடுவேன்: காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் உறுதி.

ராஜஸ்தானில் பார்மரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியுள்ள,காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்,”கொள்ளை மற்றும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.அதனால் நான் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தேன்.இது, ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை, ஆனால் அவர்களைப் பற்றி நான் கவலை பட வில்லை.அதே நேரம்,ஊழலுக்கு எதிராக நான் தொடர்ந்து போராடுவேன்.ஏன் என்றால், கரையான்கள் மரத்தை எப்படி தின்று அழிக்குமோ அதே போல் இந்த ஊழல் என்பது சமூகத்தை கரைத்து அழித்துவிடும்; என்று பேசியுள்ளார்.

Share this post with your friends