Mnadu News

எங்களுக்கு எதிராக செயல்பட்டால் கடுமையான பதிலடி கிடைக்கும் :இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை.

ராணுவ தினத்தையொட்டி, ஈரானில் நடந்த நிகழ்ச்சியில் பேசியுள்ள அதிபர் இப்ராஹிம் ரெய்சி, இஸ்ரேல் நம் நாட்டிற்கு எதிராக எடுக்கும் சிறிய நடவடிக்கைகளுக்குக் கூட கடுமையான பதிலடி கிடைக்கும்.அதே நேரம் பிராந்தியத்தின் அமைதியை வழி நடத்தும் நட்பு நாடுகளுடன் எங்கள் படை நட்புடன் இருக்கும்.இந்த சூழலில், மத்திய கிழக்கு பகுதியிலிருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும்.அNது நேரம், ஈரானின் அணு ஆயுத மற்றும் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்த கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.இருப்பினும், ஈரானின், ராணுவ படைகள் மத்திய கிழக்கு பகுதி வரை விரிந்து பரவியுள்ளன.அதோடு, லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹிஜ்புல்லா பயங்கரவாத குழுக்களுக்கு ஈரானின் ஆதரவும் காணப்படுகிறது என்று பேசி உள்ளார்.

Share this post with your friends