Mnadu News

எங்கள் அமைச்சர்கள் எதையும் சந்திக்கத் தயார்: அமைச்சர் ரகுபதி கருத்து.

புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,பாஜக தலைவர் அண்ணாமலை, ஊழல் பட்டியலை வெளியிடுவது பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. எங்களுக்கு மடியில் கனமில்லை.அதனால், வழியிலும் பயமில்லை.எங்களது அமைச்சர்கள் எதையும் சந்திக்க தயாராக இருக்கின்றனர். தமிழக ஆளுநரிடம், துணைவேந்தர் விவகாரம் உள்ளிட்ட இன்னும் 11 சட்ட மசோதாக்கள் நிலுவையில் இருக்கின்றன. அதற்கும் அவர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என நம்புகிறோம். மத்திய அரசு இந்த ஆண்டு அம்பேத்கர் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடுவதன் நோக்கம் என்னவென்றால், அடுத்தாண்டு தேர்தல் வர இருப்பது தான் காரணம்” என்றார்.

Share this post with your friends