மக்களவை தேர்தல் வருவதையொட்டி பல்வேறு கட்சியினர் தங்களது தொகுதிவாரியான வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் . அந்த வகையில் திமுக ஸ்டாலின் அவர்கள் தனது தொகுதிவாரியான வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் . இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த ஊரான சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார் . இவர் அதிமுக கூட்டணி வேட்பாளரான நாடாளுமன்ற கள்ளக்குறிச்சியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சுதீஷுக்கு ஆதரவாக திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.
முதலில் கருமந்துறை வெற்றி விநாயகர் கோவிலில் தரிசனம் மேற்கொண்டு அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் .மேலும் அவர் பிரச்சாரத்தில் பேசுகையில் நாட்டில் நிலையான ஆட்சி இருந்தால்தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்றும், நாட்டை பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடியால்தான் முடியும் என்றும் முதலமைச்சர் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது .