Mnadu News

எடப்பாடி பழனிச்சாமி மு.க.ஸ்டாலின் ஒரே நாளில் சேலத்தில் தேர்தல் பிரச்சாரம் ;

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களது தொகுதிவாரியான வேட்பாளர் பட்டியலை அறிவித்துவருகிறார்கள் . தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் அனைத்து தலைவர்களும் தொகுதிவாரியான பிரச்சாரத்தை ஆரம்பித்து வருகின்றனர் . இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய முதல் பிரச்சாரத்தை அவரது சொந்த தொகுதியான திருவாரூர் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் .

 

இந்நிலையில் அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி அவரது சொந்த ஊரில் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார் .ஆனால் இதே தினத்தன்று திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களும் சேலத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் . இரு தலைவர்களும் ஒரே நாளில் அதுவும் ஒரே ஊரில் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரிக்க உள்ளதால் கட்சி தொண்டர்களிடையே நல்ல வரேவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

 

 

 

Share this post with your friends