Mnadu News

“எதிர்க்கட்சிகளின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது”: தேவேந்திர பட்னாவிஸ் பேச்சு.

மகாராஷ்டிரா மாநில பாஜக நிர்வாகிகளின் கூட்டத்தில் பேசிய அம்மாநில துணை முதல் அமைச்சர்; தேவிந்திர பட்னாவிஸ,”நாம் கர்நாடகாவில் ஆட்சியை இழந்திருக்கலாம். ஆனால், நமது வாக்கு சதவீதம் குறையவில்லை. மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வாக்கு சதவீதம் குறைந்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் பாஜக 28 இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்ற அவர்களின் ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை. மறுபடியும் பாஜக – சிவசேனா கூட்டணியே வெற்றி பெறும்” என்று கூறியுள்ளார்.

Share this post with your friends