Mnadu News

எதிர்மறை எண்ணம் கொண்டவர்களால் நல்ல விஷயங்களை பார்க்க முடியாது: பிரதமர் மோடி பேச்சு.

ராஜஸ்தான் மாநிலம் நத்வாராவில் நடந்த விழாவில் 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.பின்னர் நிகழ்ச்சியில் பேசியுள்ள பிரதமர்,நமது அரசானது ராஜஸ்தான் மக்களுக்கு நவீன உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.ஆனால்,எல்லா வீடுகளுக்கும் குடிநீர் வசதி செய்து தரப்பட்டிருந்தால் 3 லட்சம் 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஜல்ஜீவன் அமைச்சகம் ஏற்படுத்தும் தேவை இருந்திருக்காது. எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களால் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்திக்க முடியாது. அவர்களுக்கு அரசியல் நலனே முக்கியம். அதிக எதிர்மறை எண்ணம் கொண்டவர்களால் நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களை ஒருபோதும் பார்க்க முடியாது. அவர்கள் கலகத்தை மட்டுமே உருவாக்குவார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends