மேற்கு உத்தரபிரதேசத்தில் பணத்திற்காக கொலை செய்யும் பிரபலா தாதாவாக வலம் வந்தவர் அனில் துஜானா. இவர் மீது ஒப்பந்தம் போட்டு பணத்திற்காக கொலை செய்வது, ஆட்களை கொண்டு தொழில் அதிபர்களை கடத்தியும் மிரட்டியும் பணம் பறிப்பது உட்பட 18 கொலை வழக்குகள் உள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேசம் மீரட்டில் சிறப்பு ஆயுதப்படை போலீசார் நடத்திய என்கவுன்டரில் பிரபல தாதா அனில் துஜானா சுட்டுக் கொல்லப்பட்டதாக சிறப்பு ஆயுதப்படை கூடுதல் டிஜிபி அமிதாப் யாஷ் கூறி உள்ளார்.

151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது: தலைமைச் செயலர் தகவல்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரிதீப் ஜெனா வெளியிட்ட...
Read More