Mnadu News

என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பது நகைச்சுவையானது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவினர் என் மீது அவதூறு வழக்குத்தொடர்ந்திருப்பது நகைச்சுவைக்கு உரியது. நீதிமன்றத்தில் வழக்கு நிற்காது.வரும் ஜூலை முதல் வாரத்தில் திமுகவின், 21 பேர் அடங்கிய இரண்டாவது சொத்துப் பட்டியல் வெளியிடப்படும். 2வது பட்டியலில் புதிய அமைச்சர்களின் சொத்துப் பட்டியல்கள் வெளியாகும். அப்போது என் மேல் கூடுதலாக ஒரு அவதூறு வழக்குப் போடுங்கள்.அதே நேரம்,தமிழகத்தில் 2 முறை பால் விலையை ஏற்றிய நாசரை அமைச்சரவையில் இருந்து நீக்கியதை பாஜக வரவேற்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends